என் பார்வையில்… ..
2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் . தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” .
அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது . வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது .
திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் .
புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் .
நட்புடன்
ஜோதிஜி திருப்பூர்
10.01.2015
E-Mail – texlords@gmail.com
உள்ளே
1. பஞ்சபாண்டவர்கள்
2. என் கேள்விக்கு என்ன பதில் ?
3. பணமே பயம் போக்கும் மருந்து
4 து . மு – து . பி
5. யோசிக்காதே ? ஓடிக் கொண்டேயிரு !
6. என் பெயர் மாடசாமி .
7. உழைத்து ( மட்டும் ) வாழ்ந்திடாதே !
8. பலி கொடுத்து விடு !
9. பாறைகளைப் பிளக்கும் விதைகள்
10. நேர்மையே உன் விலை என்ன ?
11. காற்றில் பறக்கும் கௌரவம்
12. கொள்ளையடிப்பது தனிக்கலை
13. வேலையைக் காதலி .
14. வண்ணங்களே வாழ்க்கை
15. பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே
16. எந்திர மனிதர்கள் .
17. அவள் பெயர் ரம்யா
18. பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்
19. பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் .
20. துணிவே துணை